search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை
    X

    ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை

    • விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளா்கள் மேற்கொண்டனா்.

    2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×