search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் தண்ணீர்
    X

    செங்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் தண்ணீர்

    • கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது.
    • குழாய் உடைப்பால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் மேலபஜார் சாலையையொட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    அதேபோல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும், இதனால் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெரும் கிராமங்கள், நகர்புற பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன்.

    ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் தற்போது பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாகவும், எனவே சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் குழாயினை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×