search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    7 மாடி கட்டிடம் குண்டு வைத்து தகர்ப்பு
    X

    7 மாடி கட்டிடம் குண்டு வைத்து தகர்ப்பு

    • வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.
    • சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு, சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை முடிவு செய்தது.

    அதன்படி நேற்று மல்காஜ்கிரி மாவட்டம் குக்கட் பள்ளி, சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர், நல்ல செலவு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கிரேன்கள் கொண்டுவரப்பட்டன.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வீடுகளை காலி செய்ய மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றி வீடுகளை இடித்தனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முடியாத 7 மாடி கட்டிடத்திற்கு குண்டு வைத்து தகர்த்தனர். கட்டிடம் சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    Next Story
    ×