search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை  மீட்பு
    X

    ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு

    • குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
    • குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.


    தொடர்ந்து 18 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று காலை குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், கிராமத்தினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×