search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
    • காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

    காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சில மாநிலங்களில் ராமர் கோவில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22-ந்தேதி அன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22-ந்தேதி பொது விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிரஸ்சேஜ் எனப்படும் ஒரே பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • தேசிய சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ஜூன் 16-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்துள்ள ஆரோவில்லில் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

    இந்த பயிற்சி பள்ளி புதுவை அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து முதல்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியை நடத்துகிறது. இந்த குதிரையேற்ற போட்டிகள் இன்று தொடங்கியது.

    வருகிற 26-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. நாள்தோறும் காலை 7 முதல் காலை 11 மணி வரை போட்டிகள் நடக்கிறது.

    போட்டியில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை மற்றும் ஆரோவில்லை சேர்ந்த தலைசிறந்த 40 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா, துருக்கி, செல்வேனியா மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பேர் நடுவர்களாக செயல்படு கின்றனர். டிரஸ்சேஜ் எனப்படும் ஒரே பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தேசிய சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ஜூன் 16-ந் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
    • கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பொங்கல் விழாவை நடத்தியது புதுவை தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகள் பேசினர். இதனால் காங்கிரஸ், தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜோய்குமார், ஹரீஸ் சவுத்ரி ஆகியோர் புதுவைக்கு வந்தனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளோடு அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் அமோக வெற்றி பெற அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    2 நாட்கள் முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கத்தையும், என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து, கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர்.


    காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. தி.மு.க. தலைவர்கள் இந்தியா கூட்டணியில், மதச்சார்பற்ற கூட்டணியில் பல போராட்டங்களை இணைந்து நடத்தியுள்ளோம்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசையும், அவர்களின் ஊழலையும், மத்திய மோடி அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

    இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் நேரம். நானும், வைத்திலிங்கமும், முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம்.

    மத ஒற்றுமை, மோடி அரசால் சிறுபான்மையினர் தாக்கப்படுவது, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியின் ஊழல், மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை விளக்கினோம்.

    அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியைத்தான் விமர்சித்தோம். இதுதான் அங்கு நடந்தது. இதற்காக தி.மு.க. தலைவர்கள் எங்களை ஒருமையில் பேசி, விமர்சித்து, மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்டபெயர் உருவாக்க சிலர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர்.

    நாங்கள் எந்த காலத்திலும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான்.

    வில்லியனூர் தொகுதியில் ஷாஜகான் காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்தார். அவரை தி.மு.க.வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதி காங்கிரஸ் செயல்தலைவர் சண்முகத்தை தி.மு.க.வில் இணைத்தது யார்? கூட்டணி தர்மத்தை மீறி இவர்கள் செயல்பட்டு விட்டு, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு, கட்சியை வளர்க்க உரிமை உண்டு. தங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தவறாக விமர்சித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முதலில் நாம் நம் நடவடிக்கையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க மாட்டோம். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளது. கூட்டணியில் தி.மு.க. குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.

    சீட் ஒதுக்கீடு செய்வது கூட்டணி கட்சித் தலைவர்கள்தான். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, 'இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வர். யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார். முதுகில் குத்தும் காங்கிரஸ் என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை என்றார்.

    • பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் நடந்த நல்லிணக்க பொங்கல் விழாவில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பாராட்டியதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அந்த விழாவில், 2026 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு சீட் கிடைக்காவிட்டால், கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். கூட்டணியை முடிவு செய்ய புதுவை மாநில தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா, தி.மு.க. தனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தி.மு.க.வை பொது வெளியிலோ, கூட்டங்களிலோ விமர்சிக்கக்கூடாது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்ப்பான கருத்துக்களை சமூகவலை தளங்களில் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் புதுவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், அதிருப்தி வெற்றியை பாதிக்கும் என காங்கிரசார் அஞ்சுகின்றனர்.

    • புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ், கூட்டணியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்த உள்ளது.

    அதுபோல, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. தமிழகத்தை பின்பற்றி அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் 3-வது அணியாக களம் இறங்க உள்ளது.

    காங்கிரஸ்., கட்சியை பொறுத்தவரை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ்., தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் பலரும் சீட் கேட்கின்றனர்.

    இந்நிலையில், வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு குழுவின் தலைவர் ஹரிஷ் சவுத்ரி நேற்று புதுச்சேரி வந்துள்ளார்.

    அவரை தொடர்ந்து, புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரும் இன்று புதுச்சேரிக்கு வருகிறார்.பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அஜோய்குமார் முதன் முதலாக புதுச்சேரிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் அஜோய்குமார், ஹரிஷ்சவுத்ரி ஆகியோர், வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கின்றனர்.

    இதனால் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

    தங்களுக்கு சீட் கேட்டு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் தி.மு.க., காங்கிரசார் இடையே கருத்து சர்ச்சையால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட குழு விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

    • உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது.

    தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்- இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

    வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

    லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

     டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

     இந்த மியூசியத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார். 

    • நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்வதுபோல புதுவையிலும் பா.ஜனதா ஆட்சியை உருவாக்க வேண்டும்.
    • 50 ஆண்டாக காங்கிரஸ், தி.மு.க. ஆட்சிதான் புதுவையில் நடந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

    தொடர்ந்து மாநில அளவில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதிய பா.ஜனதா மகளிரணி நிர்வாகிகள் பதவியேற்பு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. தலைமை வகித்தார்.

    விழாவில் காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    2026-ல் புதுவை மாநிலத்தில் தனித்து பா.ஜனதா ஆட்சி அமையும். தற்போது கூட்டணி ஆட்சி நடத்துகிறோம். என்ஆர்.காங்கிரசில் 10 எம்.எல்.ஏ. 6 பா.ஜனதா எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டோம்.

    முக்கிய துறைகள் எதுவும் பா.ஜனதா வசம் இல்லை. மக்களுக்கு பணியாற்றும் சுகாதாரம், சமூகநலத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி போன்ற துறைகள் பா.ஜனதாவிடம் இல்லை. நாம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கும், தொகுதிக்கும் தேவையான உதவிகளை செய்ய முடியவில்லை. எங்கள் கைகள் கட்டப் பட்டுள்ளது.

    சட்டமன்றத்தில் முதலமைச்சரோடு சண்டை போடுகிறோம். நாம் மாற்றத்தை கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும். நாம் நிரந்தரமான ஆட்சியை உருவாக்க வேண்டும்.

    நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்வதுபோல புதுவையிலும் பா.ஜனதா ஆட்சியை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் பா.ஜனதா தனித்து ஆட்சிக்கு வர வேண்டும். இதைப்பற்றி அமைச்சர்கள் பேச முடியாது, ஆனால் எம்.எல்.ஏ.க்களாகிய நாங்கள் பேசுவோம். பல ஆண்டாக புதுவை காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.

    50 ஆண்டாக காங்கிரஸ், தி.மு.க. ஆட்சிதான் புதுவையில் நடந்து வந்தது. அதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நாங்கள் உருவாக்கினோம். அந்த கட்சியிலிருந்து நாங்கள் பிரிந்து நாட்டை ஆளும் சக்தி பா.ஜனதா வுக்குத்தான் உள்ளது என தெரிந்து அதில் சேர்ந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
    • ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.

    படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.
    • சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.

    சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.



    தை 1-ந் தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

    இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×