search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

    • ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தை அல் காரஸ் (ஸ்பெயின்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபனையும், இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோ கோவிச் (செர்பியா), சின்னர் அல்காரஸ், அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), மெட்வதேவ், ரூப லெவ் (ரஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார். 25-வது பட்டத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×