search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை புறநகரில் 30 பேர் கண்காணிப்பு- மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பேட்டி
    X

    கோவை புறநகரில் 30 பேர் கண்காணிப்பு- மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பேட்டி

    • கோவையில் சி.சி.டி.வி. கேமராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    • புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.

    கோவை:

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட, திருட்டு போன செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்துகொண்டு 155 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் சி.சி.டி.வி. காமிராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி, துடியலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 30 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×