என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தினமும் செக்ஸ் தொல்லை: கணவனின் மர்ம உறுப்பில் மிதித்துக்கொன்ற மனைவி
- கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.
- ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஜீவாநகரை சேர்ந்த கருப்புச்சாமி மகன் ரமேஷ் (வயது 47). இவருக்கும் கிருஷ்ணவேணி (35) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். ரமேசுக்கு சொந்தமாக கேரள மாநிலம் உடும்பன் சோலையில் ஏலக்காய் தோட்டம் உள்ளது.
அவ்வப்போது அங்கு சென்று விவசாய பணிகளை கவனித்துவிட்டு வருவது வழக்கம். இதனிடையே கணவன், மனைவியிடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று ரமேஷ் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் அவரை காப்பாற்றியதாகவும் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணவேணி தனது கணவரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.
மேலும் அவரது மர்ம உறுப்பிலும் பலத்த காயம் இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணவேணியை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
எனது கணவர் தினமும் செக்ஸ்தொல்லை கொடுத்து வந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் நான் அதற்கு மறுத்து வந்தேன். இருந்தபோதும் அவரது தொல்லை நிற்கவில்லை. சம்பவத்தன்றும் என்னிடம் உறவுகொள்ள முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளினேன். மேலும் அவரை அடித்து தள்ளியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மர்ம உறுப்பில் மிதித்தும், கடித்தும் கொலை செய்தேன்.
அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க அவர் தூக்கு போட்டதுபோல செட்டப் செய்தேன். இருந்த போதும் உடலில் காயங்கள் இருந்ததால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்