search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் கொடி ஏற்றினார்
    X

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் கொடி ஏற்றினார்

    • எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி ஏற்றினார்.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். வெள்ளை சமாதான புறா பறக்க விட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம் ஜி.ஆர். நினைவு இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமு.க கொடியேற்றி வைத்து தலைவர்கள் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் மலர்கள், வாழை, தென்னை தோரணங்கள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வீதியெங்கும் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள்.

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9 மணிக்கு வந்தார். அவருக்கு மேள தாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மகளிர் அணி சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி ஏற்றினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆரவார கோஷமிட்டு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். வெள்ளை சமாதான புறா பறக்க விட்டார். அதன் பின்பு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபு, வெங்கட்ராமன், அம்மன் பி.வைரமுத்து, பி.எஸ்.சிவா, டி.கிருஷ்ணமூர்த்தி, த.மகிழன்பன், ரெட்சன் சி.அம்பிகாபதி, ஏ.கே.ரமேஷ், கே.கிருஷ்ணன், எம்.வி.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×