search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நெல்லை கங்கைகொண்டானில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
    X

    நெல்லை கங்கைகொண்டானில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த காட்சி.

    நெல்லை கங்கைகொண்டானில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.
    • எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மேளதாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க சாலை ஓரங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி திருத்து கருப்பசாமி பாண்டியன்- கொம்பன்குளம் பி.ஏ. சாமிநாதன் ஆகியோரது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் அமச்சியார் என்ற அபி-கரண் ஆகியோரது திருமணத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, தளவாய்சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகையையொட்டி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை-புதிய பஸ்நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் மற்றும் சாலை இருபுறமும் கட்சிக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×