search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ம.க. மிரட்டல் எடுபடாது- திருமாவளவன்
    X

    பா.ம.க. மிரட்டல் எடுபடாது- திருமாவளவன்

    • பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்.
    • விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பாஜனதா அ.தி.மு.க.வின் முதுகில் ஏறி சவாரி செய்ய பார்க்கிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். என்னை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிரான வலுவான ஒரு கூட்டணி அமைய வேண்டும். அதற்கான முயற்சியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்.விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது.

    தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது போல் காட்டுவது அந்த கட்சியின் ராஜதந்திரம். தேர்தல் நேரங்களில் இப்படித்தான் முயற்சி செய்வார்கள். கூட்டணியை விட்டு வெளியே நிற்பது போல் காட்டுவார்கள். இது கூட்டணி கட்சியை மிரட்டுவது. அந்த ராஜதந்திரங்களை பல தேர்தல்களில் பா.ம.க. எடுத்ததை பல கட்சிகளும் பார்த்துவிட்டன. இனி அது எடுபட போவதில்லை.

    Next Story
    ×