என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பா.ஜ.க. மையக்குழு 13-ந்தேதி கூடுகிறது
- கூட்டத்தில் மாவட்ட வாரியாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது.
- உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை போக்க திட்டமிட்டுள்ளார்கள்.
சென்னை:
இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
ஒரு பூத்துக்கு 150 முதல் 200 பேர் வீதம் ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அந்த இலக்கை அடையும் அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையில் விறுவிறுப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 6-ந்தேதி காணொலி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து இருக்க வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்குவது தொடர்பாக ஆலோசிக்க கட்சியின் மையக்குழு கூட்டம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.
மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும் உறுப்பினர்கள் குறைவாக சேர்ந்திருப்பதால் அதற்கான காரணம் பற்றியும் கேட்கிறார்கள்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதிக்குள் 75 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை போக்க திட்டமிட்டுள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்