search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள புத்தர் கோவில்களை அகற்ற வேண்டும்- தமிழக மீனவர்கள் கோரிக்கை

    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    ராமேசுவரம்:

    தமிழகம்-இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் 3, 4 தேதிகளில் திருவிழா நடத்தப்படும். இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மற்றும் இலங்கை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு படை போலீசார் சோதனைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்டு திரும்பினர்.

    இந்த நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற தமிழக மீனவர்கள் அங்கு 2 புத்தர் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கச்சத்தீவில் புத்தர் கோவில் அமைக்கப்பட்டது மதமோதலை ஏற்படுத்த வழி வகுக்கும், எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சார்லஸ் நிர்மலநாதன் எம்.பி. பேசி உள்ளார். அப்போது அவர், "அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ள கச்சத்தீவில் இலங்கை கடற்படை அமைத்த புத்தர் கோவில் களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    ராமேசுவரம் அருகே உள்ள வேர்க்கோடு பங்கு தந்தை தேவசகாயம் கூறும்போது, "கச்சத்தீவில் புத்தர் கோவில்கள் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதனால் அந்தோணியார் ஆலய திருவிழா நடத்து வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×