search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    படாளத்தில் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
    X

    படாளத்தில் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

    • சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது.
    • பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கல்பட்டு:

    வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோபாரதி (வயது 37) திருமணமானவர். இவர் தலைவாசலில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (31) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் தொழில் சம்பந்தமாக சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை மணிரத்தினம் ஓட்டினார்.

    இரவு 10 மணியளவில் கார், படாளம் தபால்மேடு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றது.

    அந்த நேரத்தில் சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய வினோ பாரதியும் மணிரத்தினமும் இருக்கையில் அமர்ந்த நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×