என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
கயத்தாறு அருகே சாலையில் கார் கவிழ்ந்து பெண் பலி
- கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் நாற்கர சாலையில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கெபின். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் காரில் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் நாற்கர சாலையில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த கெவினின் மனைவி விண்ணரசி (வயது43), ரபேல்தாஸ் மனைவி பேபி ஷாலினி (26), ஜோசப் ஆண்டனி மனைவி மேரி ரோஸ்லின் (42), காரை ஓட்டி வந்த எட்வின் என்பவரின் மனைவி மேரி சாந்தி (44) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்ததும் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் எட்வின் மனைவி மேரி சாந்தி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்