search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக்கூடாது.
    • நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் இறுதி செய்துவிட்ட நிலையில், அதை கேட்காமலேயே பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.

    உயர்வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக்கூடாது.

    எனவே, நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×