search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்
    X

    இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (7-ந் தேதி) டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் வாலாஜா, ஆத்தூரில் (சேலம்) அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கம், காட்பாடி, கலவை பகுதியில் லேசான மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×