என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா- சென்னை மாநகராட்சி
- பூங்காவில் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். .
- பூங்கா பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், ராயபுரம் மண்டலம், 53-வது வார்டுக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் உள்ள மின்ட் மேம்பாலத்தின் கீழ் 13,708 ச.மீ. பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பூங்காவில் நடைபாதை, முதியோர்கள் பயன்படுத்தக்கூடிய பகுதி, மூத்த குடிமக்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி யோகா பகுதி, சிலைகள் மற்றும் சுவரோவியங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய கட்டமைப்பு, இருக்கை வசதிகள், மின்வசதி, கழிப்பறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தப் பகுதி வாழ் மக்கள் வசதிக்காகவும், மறைந்த மூத்தோர்களின் நினைவாகவும் பிரத்யேகமாக மரக்கன்றுகள் நடுவதற்கான பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். இந்தப் பூங்கா பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்