என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருப்பூரை சேர்ந்த மேலும் ஒருவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் நல்லூரை சேர்ந்த வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
- இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது முகமதுமசூத் சமூக வலைதளங்களில் குண்டுவெடிப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
திருப்பூர்:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் (என்.ஐ.ஏ.) தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் நல்லூரை சேர்ந்த வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இந்தநிலையில் திருப்பூர் பெரிய கடைவீதியை சேர்ந்த முகமது மசூத் (வயது 42) என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது முகமதுமசூத் சமூக வலைதளங்களில் குண்டுவெடிப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தினர். இரவு வரை விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்