என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மின் கட்டண ரசீது இல்லாவிட்டாலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகத்துடன் மின் கட்டண ரசீது கேட்கிறோம்.
சென்னை:
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் வழங்குதல், முகாம்களில் எவ்வாறு செயல்படுதல் போன்றவை குறித்து செயல் விளக்க பயிற்சி சிந்தாதிரிப்பேட்டையில் இன்று நடந்தது.
இதில் மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் 703 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு முகாமில் செயல்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 500 குடும்ப அட்டைகள் கொண்ட கடைக்கு ஒரு முகாம் வீதம் நடத்தப்படுகிறது. 2,500 அட்டைகள் கொண்ட கடைகளுக்கு 5 முகாம்கள் நடைபெறும்.
முகாம் நடைபெறும் இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்கவும், எலக்ட்ரானிக் பயன்பாட்டு கருவிகள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 503 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு "லீடு பேங்க்" கூட்டுறவு வங்கி மூலம் கணக்கு தொடங்க உதவி செய்யப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் தான் உள்ளது.
ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகத்துடன் மின் கட்டண ரசீது கேட்கிறோம். ஆனால் ஆதார், ரேஷன் கார்டு மிக அவசியம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மின் கட்டண ரசீது கொண்டு வர வேண்டும். இல்லையென்றாலும் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.
2,300 பயோமெட்ரிக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கையிருப்பில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதார், வங்கி கணக்குடன் இணைப்பு செய்துள்ள செல்போன் எண் மூலம் பயாளிகளுக்கு உதவிட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்