search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி விற்பனை- போலீசார் கண்காணிப்பு
    X

    தீபாவளி விற்பனை- போலீசார் கண்காணிப்பு

    • ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது.
    • இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதனால் எப்போதும் நகரம் பரபரப்பாக காணப்படும்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்போது கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி அறிவுறுத்தலின்படி ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 சாலைகள் சந்திப்பில் போலீசார் உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×