search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து
    X

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து

    • தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான்.

    சென்னை:

    திண்டிவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில், சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் போலீசார் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

    அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும்.

    ஆனால் தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதி, ''சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த போலீசார், 'சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×