search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகள் செய்யும் பணி தீவிரம்

    • கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் சென்னையில் துர்கா சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
    • சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு திறந்த வெளியில் துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    நவராத்திரி விழாவையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வீடுகள், பொது இடங்களில் பொதுமக்கள் துர்க்கை அம்மன் சிலைகளை பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். இதையொட்டி சென்னையி ல் விதவிதமான துர்கை அம்மன் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா அனைத்து பகுதிகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதையொட்டி நூற்றுக்கணக்கான பல்வேறு விதமான துர்க்கை அம்மன் சிலைகள் சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. 2 அடி முதல் 10 அடி வரையிலான துர்க்கை அம்மன் சிலைகள் பலவித வண்ணங்களில் தயாராகி வருகிறது.

    இதுகுறித்து சென்னை பிரபாசி கலாச்சார சங்கத்தைச் சேர்ந்த சுபாஜித் பத்ரா கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக துர்கா பூஜையை பெரிதாகக் கொண்டாட முடியவில்லை. அதனால், இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் பொது இடங்களில் பெரிய வகையிலான துர்க்கை அம்மன் சிலைகள் பூஜையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட உள்ளது. துர்கா பூஜை விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் வசிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிப்லாப் பக்தா கூறியதாவது:-

    கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் சென்னையில் துர்கா சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இந்த பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டோம். பலவித வண்ணங்களில் துர்க்கை அம்மன் சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக சிறந்த சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    துர்க்கை நடன, நாடகத்துக்காக கொல்கத்தாவில் இருந்து புரோஹித், தோல் தாஷா மற்றும் போக் தயாரிப்பவர்களைக் கூட அழைத்து வருகிறோம். துர்கா பூஜை விழாவில் மிஷ்டி, ரஸ்குல்லா, மிஷித்தோய் உள்ளிட்ட வங்காள உணவு வகைகளை பக்தர்களுக்கு வழங்குகிறோம்.

    சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு திறந்த வெளியில் துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு பந்தல், கூடார வேலைகள் நடந்து வருகிறது. பூஜையில் வைக்க சிறப்பு துர்கா சிலைகள் தயாராகி வருகிறது. வருகிற 30- ந்தேதி சிறப்பாக துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×