search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார்

    • அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டிருப்பதை இரட்டை வெற்றியாகவே அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் கட்சிகள் டெல்லி அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரூ.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து டெல்லி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது.

    இருப்பினும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரம் அளித்துள்ளது.

    இதையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை விரைவில் திறந்து வைக்க உள்ளார். அதற்கான பணிகளை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×