என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழப்பு
- அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார்.
- அகிலனை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தருமபுரி:
பெரம்பலூர் மாவட்டம் குன்ன தாலுகா, நன்னை மேற்கு தெருவில் வசித்து வருபவர் அழகப்பன் மகன் அகிலன் (வயது28).
சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அகிலன் நேற்று முன்தினம் தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாவுக்காக வந்தார்.
இந்த நிலையில் அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும்போது அகிலன் கரை மீது ஏறி குதித்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.
அப்போது அகிலன் தண்ணீரில் அசைவின்றி மிதந்து கிடந்தார்.
இதை பார்த்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்