search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழப்பு
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழப்பு

    • அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார்.
    • அகிலனை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்ன தாலுகா, நன்னை மேற்கு தெருவில் வசித்து வருபவர் அழகப்பன் மகன் அகிலன் (வயது28).

    சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அகிலன் நேற்று முன்தினம் தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாவுக்காக வந்தார்.

    இந்த நிலையில் அகிலன் தனது நண்பர்களுடன் பரிசல் மூலம் மணல்மேடு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும்போது அகிலன் கரை மீது ஏறி குதித்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.

    அப்போது அகிலன் தண்ணீரில் அசைவின்றி மிதந்து கிடந்தார்.

    இதை பார்த்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×