search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தி.மு.க.வுக்கு தாவலா?
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தி.மு.க.வுக்கு தாவலா?

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது.
    • தே.மு.தி.க. வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் தி.மு.க.வுக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஆனந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே 2005-ம் ஆண்டு முதல் நான் தே.மு.தி.க.வில் இணைந்து பணியாற்றி வருகிறேன். கட்சியின் கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன்.

    கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் என் மீது முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்துள்ளனர். பெரிய பெரிய கட்சிகளே வேட்பாளரை அறிவிக்க தயக்கம் காட்டும் நிலையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து என்னை வேட்பாளராக அறிவித்து உள்ளனர்.

    நானும் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டேன். இந்த நிலையில் எனது பெயரை கெடுக்க மாற்று கட்சிக்கு செல்வதாக கூறுவது வதந்தி. இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×