என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தக்காளி திருட்டை தடுக்க தோட்டத்தில் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
- விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
- ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.
ஓசூர்:
கடந்த ஒரு மாதகாலமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள சில விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் இரவு பகலாக தொடர்ந்து தோட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தக்காளி தோட்டத்திற்கு முள்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் அருகே தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.
தற்போது தக்காளி திருட்டு நடைபெறுவதால் அவர் தக்காளி விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் ரூ.1½ லட்சத்தில் தோட்டத்தை சுற்றிலும் கருங்கல் தூண் நட்டு, இரும்பு வேலி அமைத்து தக்காளி தோட்டத்தை பாதுகாத்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்