என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை- ஒகேனக்கலில் இரண்டாவது முறையாக காட்டாற்று வெள்ளம்
- ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் வந்தது.
- ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை விதித்துள்ளது.
பென்னாகரம்:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 629 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 9 ஆயிரத்து 250 கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இரு அணைகளின் இருந்து 44 ஆயிரத்து 879 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு லுவுக்கு கரைபுரண்டு வந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி தண்ணீர் வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை விதித்துள்ளது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.
மேலும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் ஒகேனக்கலில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாலை திடீரென நீர்வரத்து அதிகரித்த நிலையில் காவிரி ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்த ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் என்பவர் மெயின் அருவி நடைபாதை அருகே மாட்டி கொண்டார். இதனால் அங்கிருந்து வரமுடியாமல் தவித்தார். பின்னர் நடைபாதை வழியாக வெள்ளத்தில் நடந்து வந்தபோது அவர் திடீரென அடித்து செல்லப்பட்டார்.
தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீனவரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டாவது முறையாக 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்