search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    ஒகேனக்கல் அருவி

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    • இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பென்னாகரம்:

    கர்நாடகா, கேரளா மாநில இடையேயான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 34-வது நாளாக தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×