search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது: ஜெயக்குமார் கடும் தாக்கு
    X

    அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது: ஜெயக்குமார் கடும் தாக்கு

    • லுங்கி கட்டுவது அவமரியாதை போல அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.
    • தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது.

    நான் லுங்கி கட்டிக்கொண்டு பேட்டி அளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். லுங்கி கட்டுபவர்களை அவமதிப்பது போல அவர் பேசி உள்ளார். இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் லுங்கிதான் கட்டுகிறார்கள். தமிழகத்தில் வீட்டில் இருக்கும்போது பலர் லுங்கியுடன்தான் இருப்பார்கள். எனவே லுங்கி கட்டுவது அவமரியாதை போல அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.

    அண்ணாமலை மாதிரி கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் யாரும் நைட்டி போட்டுக்கொண்டு சுற்றுவது இல்லை. அ.தி.மு.க. எழுச்சியோடு வழிநடத்தப்படுகிறது. இதனை பிடிக்காதவர்கள் தான் திட்டமிட்டு திரைக்கதை எழுதி மாயையை உருவாக்கி உள்ளார்கள். இது ஒரு மாயை தான்.

    சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச்செயலை செய்து இருக்கிறார்.

    இவர்கள் 3 பேரும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து அ.தி.மு.க.வின் ரத்தத்தை குடித்த அட்டைகள் என்பது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.

    மூன்று பேரையும் வெளியேற்றியது பொதுக்குழு எடுத்த முடிவாகும். ஒன்றரை கோடி தொண்டர்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.கவில் பயணிக்கின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கேட்கிறோம். அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. முதலமைச்சர் இருக்கிறாரா? உள்துறை இருக்கிறதா? என்பதே சந்தேகமாக உள்ளது. பொதுமக்கள் தன்னைத் தானே காப்பாற்றிக்கொண்டால் போதும் என்ற நிலை தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

    Next Story
    ×