என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி
- மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .
திருப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது.
12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது. அதனால் வங்கதேச துணிகள் வரவில்லை. ஆனால் பா.ஜ.க. வரி விதிக்காததால் வங்கதேச துணிகள் வருகின்றன. மத்திய அரசு இதனை சரி செய்ய வேண்டும். சீனாவில் இருந்து வருகிற பாலிஸ்டராலும் பிரச்சனை. பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை. அதனை உற்பத்தி செய்பவர்கள் அதானி அம்பானி, வேறு யாருக்கும் உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனையும் சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில் தான் உள்ளது. மன்னர் காலத்திலும் மன்னர் கையில் தான் கோவில்கள் இருந்தன.
கோவில்கள் அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறந்தது. சேகர்பாபு சைவ பழம் போல் தெரிகிறார். 5000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டாமா?
தமிழக கவர்னருக்கு மாலைக்கண் நோய். அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை என தெரிவிக்கிறார்.
சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.
தமிழக முதல்வர் சில நடவடிக்கைகள் தவறாக நடந்தால் திரும்ப பெறுகிறார். திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .
காவிரியை வைத்து கர்நாடகா பா.ஜ.க., தமிழக பா.ஜ.க. அரசியல் செய்கிறார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் பேசி சரி செய்வோம். பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காரணமே தவிர வேறு இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம்.
சமீபத்தில் நடந்த கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர், நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை.
அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயர் இருந்தது அதனை மோடி தன் பெயருக்கு மாற்றி கொண்டார்.
நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பு இருக்கிறது. அமலாக்கத்துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்கு சென்று சோதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் அமலாக்கத்துறை முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அமலாக்கத்துறை பண பரிமாற்றத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்வதில்லை. அமலாக்கத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அவர் மீது தனிப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்க வாய்ப்பு உண்டு. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும்.
கவர்னர் வேண்டாம் என்றோ அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம்.
இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல தமிழ்நாடு கவர்னருக்கு தான். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது இல்லை. கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தான் பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்