search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • வருகிற 24-ந் தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் 223-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
    • மருது பாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாமன்னர் மருதுபாண்டியரின் 223-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி வருகிற 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்படுகிறது.

    அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் நந்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கீர்த்திகா முனியசாமி, மணிகண்டன், செந்தில்நாதன், முனியசாமி, கணேசராஜா, சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவிக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×