search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பியது.

    பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் 2-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன திட்டத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 58.92 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×