search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்- செல்வப்பெருந்தகை
    X

    நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்- செல்வப்பெருந்தகை

    • நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
    • தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் அளித்ததில் முறைகேடுகள் என நாடு முழுவதும் உருவாகியிருக்கிற எதிர்ப்பை வீதி முதல் பாராளுமன்றம் வரை நீட் தேர்வு ஊழலை எழுப்புவோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு திணிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டுமென்ற ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×