என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தக்கலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி திடீர் மரணம்- மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை
- திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார்.
- பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் தச்ச கோடு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது40). இவர் அழகிய மண்டபம் பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் முளகுமூடு பேரூர் சுற்று சூழல் பாசறை செயலா ளராகவும் அருள்தாஸ் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அடிமை மறுவாழ்வு மையத்தில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சு வலிப்பதாக மனைவி ஆலீசிடம் கூறி உள்ளார். உடனே அவரை அழகிய மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருள்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது சம்மந்தமாக அவரது மனைவி ஆலீஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருள்தாஸ், காதல் திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஜோசப் பிராங்கோ, ஜோசப் காஸ்ரே என்ற 2 மகன்கள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்