search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனாதிபதி பதக்கம்- நாடு முழுவதும் 21 பேருக்கு அறிவிப்பு
    X

    ஜனாதிபதி பதக்கம்- நாடு முழுவதும் 21 பேருக்கு அறிவிப்பு

    • ஜனாதிபதி பதக்க விருதுக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்க விருதுக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் ஐ.ஜி.தேன் மொழி, டி.எஸ்.பி.க்கள் பொன்ராமு, ரவிசேகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்படி இவர்கள் 3 பேரும் விரைவில் ஜனாதிபதி பதக்கத்தை பெற உள்ளனர்.

    நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்தும் ஜனாதிபதி பதக்கத்துக்கு போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    மொத்தம் 21 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.

    மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது.

    Next Story
    ×