என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாராளுமன்ற தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்: சீமான்
- கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர்.
- தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம்
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர் உரிமைத்தொகையை பெற பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரூ.1000 கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள். கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்.
பா.ஜ.க.வும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் ரூ.2000 ஆக்கி விடுவார்கள்.
தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம். தற்போது பொதுப்பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர். தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்