என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
திருவள்ளூர் அருகே வீட்டில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு
BySuresh K Jangir16 July 2022 10:02 AM GMT
- புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
- தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (52). கொத்தனார். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார்.
அப்போது புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்தபடி வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.
அப்போது பாம்பு வீட்டின் ஒரு மூலையில் பாத்திரத்திற்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. அதை லாவமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X