search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீடுகளின் மீது மர்மமான முறையில் விழும் கற்கள்- அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்
    X

    வீடுகளின் மீது மர்மமான முறையில் விழும் கற்கள்- அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்

    • மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒட்டப்பாளையம் பகுதி மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலனியில் இரவு 7 மணி முதல் இரவு 2 மணி வரை தொடர்ச்சியாக வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்து வருகிறது. இதனால் வீடுகளின் ஓடுகள் உடைந்து சேதமடைவதுடன், குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத நிலையும் உள்ளது. மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இரவு 7மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வீடுகளின் மேல் கற்கள் விழுகிறது. வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது. மர்மநபர்கள் யாராவது இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனரா என ஊர் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்கள் பகுதி இளைஞர்கள் பார்வையிட்டனர். ஆனால் மர்மநபர்கள் யாரும் சிக்கவில்லை.

    போலீசார், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து நிற்கும் போதே வீடுகளின் மேல் கற்கள் வந்து விழுந்தது. இது யாருடைய செயல் என்று தெரியவில்லை. எப்படி கற்கள் வந்து விழுகிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் உள்ளோம். இது குறித்து போலீசார், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    Next Story
    ×