என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
அடுத்த 2 நாட்களுக்கு கொடூர வெயில் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்
- அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
- தமிழகத்தில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஈரோடு பகுதியில் மிக அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரித்தது.
10-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 106 டிகிரி வரை வெயில் அடித்தது. கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 102.92 டிகிரி வெப்பம் பதிவானது.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), முதல் வியாழக்கிழமை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. இந்த 3 நாட்களும் கூடுதலாக 5 டிகிரி வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
எனவே அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெயிலில் சென்று விட்டு உடனடியாக குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த 24 நாட்களும் அதிகபட்ச வெயில் தாக்கம் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வெளியூர் பயணங்களை அமைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. நேற்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. வடதமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக கோடை மழை காணப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 40 மி.மீ. கோடை மழை பெய்து இருந்தது. வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான அளவுக்கு ஆங்காங்கே கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்