என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாடுபிடி வீரரின் வலது கண்ணை பதம் பார்த்த ஆக்ரோச காளை
- காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது.
- வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ராச்சாண்டார்மலையில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், போட்டியில் பங்கேற்ற வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.
அப்போது வீரர் மீது மாடு ஆக்ரோசமாக பாய்ந்தது. இதில் சிவக்குமாரின் வலது கண் பகுதியில் கொம்பு முட்டியதில் வலது கண் வெளியே வந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதியம் 12 மணி வரை மாடுபிடி வீரர்கள் 15 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 5 பேர் என மொத்தம் 25 பேர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்