search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாடுபிடி வீரரின் வலது கண்ணை பதம் பார்த்த ஆக்ரோச காளை
    X

    மாடுபிடி வீரரின் வலது கண்ணை பதம் பார்த்த ஆக்ரோச காளை

    • காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது.
    • வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ராச்சாண்டார்மலையில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள்.

    அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காளைகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை வெளிப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், போட்டியில் பங்கேற்ற வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாடுபிடி வீரர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றார்.

    அப்போது வீரர் மீது மாடு ஆக்ரோசமாக பாய்ந்தது. இதில் சிவக்குமாரின் வலது கண் பகுதியில் கொம்பு முட்டியதில் வலது கண் வெளியே வந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதியம் 12 மணி வரை மாடுபிடி வீரர்கள் 15 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 5 பேர் என மொத்தம் 25 பேர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×