search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குண்டடத்தில் இன்று மாலை நடக்கிறது- மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம்
    X

    குண்டடத்தில் இன்று மாலை நடக்கிறது- மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம்

    • திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசுகிறார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் செய்துள்ளார்.

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் புரட்சி தலைவி அம்மா திடலில் இன்று மாலை 3 மணிக்கு மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் செய்துள்ளார். கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்திற்காக குண்டடம் பஸ்நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று குண்டடம் பகுதியில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×