என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
அ.தி.மு.க. பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது?
- கடந்த ஜூலை மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதன் காரணமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதன் பிறகு மார்ச் 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் எதிர் பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் எப்போது நடத்தலாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அநேகமாக அடுத்த மாதம் 2-வது வாரம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை.
அதற்கேற்ப அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்