search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மே 5-ந்தேதி முதல் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்
    X

    மே 5-ந்தேதி முதல் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்

    • புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் கடந்த 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
    • உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும்; புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் கடந்த 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    கழகத்தில் உறுப்பினர் சேர்ப்பது சம்பந்தமாக மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அனைத்து விபரங்களும் தெளிவாக பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களில், மாவட்டக் கழகச் செயலாளரின் சீல்; சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பம்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பத்துடன், தமிழ்நாட்டில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 10 ரூபாய் வீதமும்; பிற மாநிலங்களில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 5 ரூபாய் வீதமும் கணக்கிட்டு, வருகின்ற 4.5.2023 - வியாழக்கிழமை முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×