என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஐ.டி. ஊழியர் பலி
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
- வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமண சுவாமி. இவரது மகன் திருமாறன்(வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சமீப காலமாக அவர் நெல்லையில் தனது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக திருமாறன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நள்ளிரவில் படம் முடிந்த பின்னர் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று திருமாறன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்