search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,894 கன அடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,894 கன அடியாக அதிகரிப்பு

    • நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்து வருகிறது. நேற்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 138 கன அடி வீதம் கண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலியாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.81 அடியாக சரிந்து உள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×