search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    3-வது நாளாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    3-வது நாளாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • 3-வது நாளாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,692 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. 3-வது நாளாக இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,692 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.02 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×