search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: ஒரே நாளில் 4 அடி உயர்ந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
    X

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: ஒரே நாளில் 4 அடி உயர்ந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

    • கனமழை காரணமாக பவானிசாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
    • பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.49 அடியாக உள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,982 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.

    கனமழை காரணமாக பவானிசாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளும் நிரம்பி வருகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம்-29.84, பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்-5.93, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம்-27.72 அடியாக உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×