search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலையில் விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து வைத்த டிஜிட்டல் பேனர்
    X

    சென்னிமலையில் விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து வைத்த டிஜிட்டல் பேனர்

    • நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.
    • தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள்.

    சென்னிமலை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நாளை வெளியாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இரண்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    பல ஊர்களில் ஒரே மாலில் உள்ள இரண்டு தியேட்டர்களில் இருவர் நடித்த படமும் வெளியிடப்படுகிறது. அப்படி உள்ள இடத்தில் தியேட்டர் முன்பு கட்அவுட், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரண்டு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் துணிவு படம் மட்டும் வெளியாகிறது.

    இதையடுத்து அந்த தியேட்டர் முன்பு விஜய், அஜித் ரசிகர்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக அஜித், விஜய் ஆகியோரின் போட்டோக்களை போட்டு இரண்டு படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். அதில் ''நீயும் நானும் வேற இல்லடா... ரெண்டு பேரும் ஒத்த உசுருடா...'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து சென்னிமலை ஒன்றிய அஜித் ரசிகர்கள் மன்ற நிர்வாகியான நேதாஜி என்பவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகை என்றாலே சிலருக்குப் பொங்கல் சாப்பிடப் பிடிக்கும் சிலருக்கு கரும்பு சாப்பிடப் பிடிக்கும் ஆனால், பொங்கல் இல்லாத கரும்போ அல்லது கரும்பில்லாத பொங்கலோ ரசிக்கவும் பிடிக்காது ருசிக்கவும் பிடிக்காது.

    அதுபோல் தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள். இதில் ஒருவரை வெறுத்து இன்னொருவரை ரசிப்பது கரும்பை ஒதுக்கி பொங்கல் கொண்டாடுவது போல, என்னும் நோக்கில் "நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா" என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×