என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னையில் இடைவிடாத கொண்டாட்டம்- நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்கு
- சென்னை மாநகர் முழுவதும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- போலீசார் அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.
தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேரக் கட்டுப்பாட்டை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே இருந்தனர்.
இது தொடர்பாக சென்னை மாநகர் முழுவதும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் தீபாவளி அன்று ரோந்து சென்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 163 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்